'ஈ' படத்தில் இணைந்து நடித்த ஜீவாவும் நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் 'திருநாள்'. கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராம்நாத் இயக்கியுள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் சில சிக்கல்களால் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அடுத்த மாதம் வெளியாகிறது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் 'திருநாள்' படத்தையும் வெளியிடுகிறது. அநேகமாக ஆகஸ்ட் 19 அல்லது 26ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் வெளியாகும் 'திருநாள்'
1 mins read
-

