'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் குறித்துத் தினமும் ஏதாவது ஒரு செய்தி வெளியான வண்ணம் உள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான தகவலை ஹன்சிகா மறுத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. திண்டுக்கல்லில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைத் திரும்பியுள்ளனர் படக்குழுவினர். சிம்பு, ஸ்ரேயா, மகத், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். விரைவில் சென்னையில் பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம் சிம்பு. ஒரு வேடத்துக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மற்ற இரு பாத்திரங்களுக்கான நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார்கள். இதில் ஒரு நாயகியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதை மறுத்துள்ள ஹன்சிகா, "அச்செய்தி வெறும் வதந்தி. நான் அப்படத்தில் நடிக்கவில்லை," என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
ஹன்சிகா: சிம்புவுடன் நடிக்கவில்லை
1 mins read

