'காஷ்மோரா' படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. மொட்டைத் தலையும் கத்தைத் தாடி யுமாக வித்தியாசமான ஒரு வேடத்தில் இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி நேற்று முன்தினம் வெளியானது. அந்த சுவரொட்டியில் கார்த்தி மிரட்டலாக இருக்கிறார் என்று கூறுகின்றனர் கார்த்தி ரசிகர்கள். 'காஷ்மோரா'வில் படைத் தளபதி, வயதான மன்னன், சராசரி மனிதன் என்று மூன்று வேடங்களில் நடித்திருக் கிறார் கார்த்தி. குறிப்பாக படைத் தளபதியாக நடித்திருக்கும் ராஜ்நாயக் என்ற வில்லன் வேடத்தில் இதுவரை எந்தப் படத்திலும் பார்க்காத வித்தியாசமான கார்த்தியைப் பார்க்கலாம் என்கிறது படக்குழு. வில்லன் வேடத்தில் பெரிய அளவில் அராஜகம் செய்பவராக நடித்துள்ளாராம் கார்த்தி.
'ரௌத்திரம்', 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படங்களுக்குப் பிறகு கோகுல் இயக்கியுள்ள இந்தப் படம் சரித்திர கதையாக உருவாகி யிருக்கிறது. அந்த வகையில் கார்த்தி, கோகுல் இருவருக்குமே இது முதல் சரித்திரப் படமாகும். இந்தப் படத்தில் கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்திருக் கின்றனர். கார்த்தி இந்தப் படத்திற்காக தனது நடை, உடை ஆகியவற்றை மாற்றியுள்ளார். படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், "படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். முதலில் 47 வகையான வேடங்களைப் போட்டுப் பார்த்து அதில் இந்த மூன்று வேடங்களைத் தேர்வு செய்தோம்.
"அதில் ஒரு வேடம்தான் மொட்டைத்தலை, நீண்ட தாடி, மீசை கதாபாத்திரம். இந்த சுவரொட்டி காட்சியில் மட்டும் சுமார் 300 நடிகர்கள் நடித்திருக்கின்றனர். "காஷ்மோரா' படத்தில் நாம் இதுவரை பார்த்திராத கார்த்தியைப் பார்க்கலாம். 'பாகுபலி' படத்தில் சத்தியராஜ் நடித்திருந்த 'கட்டப்பா' போல அசத்தலாக இருக்கிறார் கார்த்தி," என்றார்.

