ரசிகர்களின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்த சமந்தா, காதலர் நாக சைதன்யா, மஸ்கட்டி ஐஸ்கிரீம், வேலை இவை மூன்றும் இல்லாமல் தன்னால் வாழ முடியாது எனத் தெரிவித்துள்ளார். சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் அவர் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, எந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் உங்களால் வாழ முடியாது என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, நாக சைதன்யா, மஸ்கட்டி ஐஸ்கிரீம், வேலை எனப் பதிலளித்த சமந்தா, மற்றொரு ரசிகரின் கேள்விக்குப் பதில் அளித்தபோது, அனைத்துப் படங்களையும் முதல் படமாக நினைக்க வேண்டும் என்று மகேஷ் பாபு தனக்கு அறிவுரை சொன்ன தாகவும் கூறினார்.
சமந்தா வாழ்வில் முக்கிய இடம்பிடித்த ஐஸ்கிரீம்
1 mins read
-

