மஞ்சிமாவைக் கண்டு அலறும் கீர்த்தி சுரேஷ்

மஞ்சிமாவைக் கண்டு அலறும் கீர்த்தி சுரேஷ்

1 mins read
75630290-4b12-4976-92a6-5ff3bd8e2b20
-

அண்மை­யில் வெளி­வந்து வெற்றி நடை போட்­டுக்­கொண்­டி­ருக்­கும் படம் 'அச்சம் என்பது மடமை­யடா'. இந்தப் படத்­தின் நாயகி மஞ்சிமா மோகனைப் பார்த்து கீர்த்தி சுரேஷ் தன்­னுடைய வாய்ப்பு பறி­போய்­வி­டுமோ என்று பயப்­படு­கிறா­ராம். கேர­ளா­வில் இருந்து கோலி­வுட்­டுக்கு இறக்­கு­ம­தி­யா­கும் ஓரிரு நடிகை­கள்­தான் தோல்­வி­யடை­வார்­கள். பலர் வெற்றி பெற்றுவிடு­வார்­கள். அந்த வகையில் அண்மைய வர­வு­களில் மியா ஜார்ஜ், நிகிலா விமல் போன்ற சில கேர­ளத்து நடிகை­கள் பெரிதாக பெயர் போட­வில்லை.

இருந்தா­லும் கௌதம்­மே­ன­னின் 'அச்சம் என்பது மடமை­யடா' படத்­தில் சிம்­பு­வு­டன் நடித்து வந்த மஞ்சிமா மோக­னுக்கு அந்தப் படத்­தில் நடிக்­கும்­போதே விக்ரம் பிர­பு­வு­டன் 'முடிசூடா மன்னன்' மற்றும் கௌரவ் இயக்­கும் படம் என இரண்டு படங்கள் புதிதாக ஒப்­பந்த­மா­கி­விட்­டன. தற்போது இவர் நடித்து வெளி­வந்­துள்ள 'அச்சம் என்பது மடமை­யடா' படம் வெற்றி பெற்­றி­ருப்­ப­தால் கொஞ்சம் தாம­தித்­தால் வெற்றியை முன்வைத்து மஞ்சிமா சம்ப­ளத்தை உயர்த்திவிடுவார் என்று கடந்த சில தினங்களில் அவரை சில படங்களுக்கு ஒப்­பந்தம் செய்துவிட்­ட­னர் தயாரிப்பாளர்கள்.