தமிழ்த் திரையுலகில் நடப்பாண்டைப் பொறுத்தவரை யில், தங்களின் வர்த்தகத்துக்கு உறுதுணைபுரிந்த நாயகன் சிவகார்த்திகேயன் தான் என்கிறார்கள் விநியோகிப்பாளர்கள். 2015ஆம் ஆண்டு பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பொருள் நெருக்கடியால் தள்ளி வைக்கப்பட்ட படம் 'ரஜினி முருகன்'. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் 2016, பொங்கல் பண்டிகை யின்போது வெளியானது. 'தாரை தப்பட்டை', 'கெத்து' உள்ளிட்ட படங்களோடு வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, எதிர்பார்ப்பு கள் எகிறியதால் அதிகமான திரை யரங்குகளில் வெளியானது 'ரஜினிமுருகன்'. 2016ஆம் ஆண்டில் விநியோகிப் பாளர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த முதல் படமாக 'ரஜினிமுருகன்' திகழ்ந்தது. அப்படத் தின் வசூல் தமிழ்த் திரையுலகின் முன் னணி நடிகர்கள் பலரையும் ஆச்சரியப் படுத்தியது. அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத் தில் 'ரெமோ' படத்தில் நடிக்கத் தொடங்கி னார் சிவகார்த்திகேயன்.
வர்த்தக நாயகனாக உயர்ந்த சிவா
1 mins read
-

