விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை சரத்குமாரும் அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் தயாரிக்க உள்ளனர். 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படம் அண்மையில் திரைக்கு வந்தது. விரைவில் 'எமன்' படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. அடுத்து 'ஐ பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.
புதுமுக இக்குநர் சீனுவாசன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து கூறிய விஜய் ஆண்டனி "நான் என் தாய் வீட்டுக்கு வந்துள்ள மன நிலையில் இருக்கிறேன். என் திரைப் பயணத்தை இசை அமைப்பாளனாகத் தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில் எனக்கு வாய்ப்பளித்தவர் ராதிகா. அதன் அடிப்படையில் இந்த நட்சத்திர தம்பதியினருக்குப் படம் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்," என்கிறார்.