'சக்கப்போடு போடு ராஜா' படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். இப்படத்திற்கு இசை அமைப்பவர் நடிகர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் அனைத்திற்கும் இசையமைத்து முடித்துவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சிம்பு. "'சக்கப்போடு போடு ராஜா' படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் நான் இசையமைத்து முடித்துவிட்டேன். பாடல் பதிவு மட்டும் தான் மீதமுள்ளது.
"நான் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படப்பிடிப்பில் மும்முரமாக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். எனினும், எனது நண்பன் சந்தானத்துக்காக 'சக்கப்போடு போடு ராஜா' படத்திற்கு இசையமைப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் அப்பணிகளை விரைவில் முடித்துவிட்டேன்," என சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகர், பாடகர், இயக்குநர் என பன்முகங்களைக் கொண்ட சிம்பு தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த வகையில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.