ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு நயன்தாரா தன்னுடைய ஆதரவை அளித்திருக்கிறார். நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு அவர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். கறுப்பு நிறத்தில் மேலாடை அணிந்து, முகத்தைக் கறுப்புத் துணியால் மூடியபடி எந்தவித ஒப்பனையும் இல்லாமல் அவர் போராட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக "இளைய தலைமுறை யின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இந்தத் தரு ணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவள் என்னும் பெருமை என்னைத் தலைநிமிர வைக்கிறது.
"இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக் கிறது," என ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக நயன்தாரா அறிக்கைவிட்டது குறிப்பிடத்தக்கது.