விஷால்: விவசாயிகள் மிகவும் முக்கியம்

விஷால்: விவசாயிகள் மிகவும் முக்கியம்

1 mins read
04d5644f-735a-4f0a-8cdc-3852d1651b3a
-

படப்பிடிப்பிற்காக சிதம்பரம் சென்ற நடிகர் விஷால் அங்கு மாணவர் களோடு சேர்ந்து சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் நாட்டிற்கு விவசாயிகள் மிகவும் முக்கியம் என்று கூறினார். நடிகர் அஜித்தின் மதுரை ரசிகர்கள் கடந்த வாரம் தங்கள் பகுதியில் இருந்த சீமை கருவேல மரங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கினர். அதற்குச் சமூக வலைத்தளத்தில் அவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்தன. அதைத்தொடர்ந்து சிதம்பரத் தில் நடிகர் விஷாலும் அப்பணியில் ஈடுபட்டார். சிதம்பரத்தில் 'துப்பறி வாளன்' படப்பிடிப்பிற்காக அவர் சென்று உள்ளார். அப்போது, சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் மீதிகுடி கிராமம் அருகே சரஸ்வதி அம்மாள் நகரில் சீமை கருவேல மரம் அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு இருந்தனர். அதைப் பார்த்த விஷாலும் களத்தில் இறங்கினார். அப்போது பேசிய அவர், "சீமை கருவேல மரங்களை மாணவர் களால் மட்டும் அழிக்க முடியாது.