3 படங்களின் இரண்டாம் பாகங்களில் தனுஷ்

3 படங்களின் இரண்டாம் பாகங்களில் தனுஷ்

1 mins read

தனுஷ் முன்பு நடித்த 3 படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். இம்மூன்று படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடக்க இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். 'சிங்கம்', 'சென்னை-28', 'பசங்க' ஆகிய படங்கள் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றன. இதுபோன்றே தனுஷ் நடித்திருக்கும் மூன்று படங்களின் அடுத்த பாகங்கள் உருவாக இருக்கிறது. தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி', 'கொடி' படங்களின் 2ஆம் பாகம் தயாரிக்கப்பட இருப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரி விக்கின்றன.

இன்றைய செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg