இப்போதைக்குத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அஞ்சலி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஜெய்-, அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வருகின்றன. அண்மையில் ஒரு திரைப்படத்தின் விளம்பரத்துக்காக, ஜெய் தோசை சுட்டு அஞ்சலிக்கு கொடுத்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதைப் பார்த்த பலரும் பாராட்டி கருத்துக்கள் தெரி வித்தனர். இதையடுத்து இருவரும் திருமணத்துக்குத் தயாராகிவிட்டதாகக் கூறப் பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பலூன்' படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதைச் சுட்டிக்காட்டி, "அஞ் சலி இல்லாத தருணங்கள் வருத்தம் அளிக்கிறது," என்று ஜெய்யும், "மகிழ்ச்சியான நேரம் மீண்டும் வரும்," என்று அஞ்சலியும் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள்.
திருமணம் இப்போது இல்லை
1 mins read
-

