கங்கனா: பெண்களுக்கு ஆதரவு தேவை

கங்கனா: பெண்களுக்கு ஆதரவு தேவை

1 mins read
69bf3d67-1a03-4b9b-8886-47b132788f9f
-

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு அவர்களது குடும்பத்தார் முழுமையான ஆதரவை வழங்கி, தைரியமூட்ட வேண்டும் என இந்தி நடிகை கங்கனா ரணவத் கேட்டுக் கொண்டுள்ளார். பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாகப் பேச பெண்கள் தயங்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். "பாலியல் தொல்லை என்பது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதுபோன்ற சூழலை சந்திக்கும் பெண்கள், இதுபற்றி தைரியமாகப் பேச வேண்டும். "பொதுவாக சொல்லப்போனால், இதுபோன்ற பாலியல் தொல்லைகளை சந்திக்கும் பெண்கள், இதனை தைரியமாக வெளியில் கொண்டு வர அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் ஊக்குவிக்க வேண்டும். மாறாக பாதிக்கப்பட்ட பெண்களை அவமானப்படுத்தக் கூடாது.