மலேசியாவில் உருவாகும் 'கில்லி பம்பரம் கோலி'

மலேசியாவில் உருவாகும் 'கில்லி பம்பரம் கோலி'

1 mins read
7df869e8-5ee8-40fb-bced-64540303a651
-

அறிமுக இயக்குநர் மனோகரன் இயக்கத்தில் உருவாகும் 'கில்லி பம்பரம் கோலி'. புதுமுகங்கள் தமிழ், பிரசாத், நரேஷ் என மூன்று பேர் கதையின் நாயகர்களாகவும், தீப்தி ஷெட்டி என்ற புதுமுகம் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகி இருந்தாலும் இப்படத்தில் பெயரளவுக்குக் கூட காதல் கிடையாதாம். இப்படம் நட்பையும், வாழ்க்கைக்காக நடக்கும் போராட்டத்தையும் மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். "தமிழ் மண்ணுக்கே உரிய விளையாட்டுக்களான கில்லி, பம்பரம், கோலி ஆகியவற்றின் பெருமையைப் பறைசாற்றும். அதனால் இளையர்களை நிச்சயம் கவரும்," என்கிறார் இயக்குநர் மனோகரன்.