அபி சரவணன், காயத்ரி ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'இவன் ஏடாகூடமானவன்'. சைலேஷ் சிவராஜா தயாரித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெஸ்டின் திவாகர். இது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அராஜகத்தில் ஈடு படும் அதிகார வர்க்கத்தினரை வெளிச்சம் போட்டு காட்டும் படமாம். "அரசியல் பலத்துடன் வலம் வரும் சிலர், சமூகத்தில் கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக்களை மிகக் குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி தன்வசப்பபடுத்திக் கொள்கிறார்கள். "இவ்வாறு பாதிக்கப்பட்டவர் களில் ஒருவன் வெகுண்டு எழுகிறான். அவன் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு என்ன பாடம் கற்பித்தான் என்பதே கதை. "இதை காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் விறுவிறுப்பாக சொல்லப் போகி றோம். இதில் இன்னொரு இளம் ஜோடியாக யோகி, அகல்யா ஆகிய இருவரும் அறிமுகமாகிறார்கள்.
அபி சரவணன் நடிக்கும் 'இவன் ஏடாகூடமானவன்'
1 mins read
-

