உதயா பெரிதும் எதிர்பார்க்கும் படம் 'உத்தரவு மகாராஜா'. இதுவரை அவர் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் இது உருவாகி வருகிறது. ஆசிப் குரைஷி இயக்கும் இப்படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். "தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான திகில் படங்கள் ஒரே பாணியில் எடுக்கப்பட்டவையாக உள்ளன. இந்தப் படம் மாறுபட்ட படைப்பாக இருக்கும். அதிலும் உதயா ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பேசப்படும். அந்தளவு அவர்களைக் கவரும்," என்கிறார் ஆசிப் குரைஷி. தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் திரைகாண உள்ளது இப்படம்.
'உத்தரவு மகாராஜா'
1 mins read
-

