பெரிய ரவுடிக்கும் ஒரு சாமானி யனுக்கும் இடையே நடக்கும் மோதலை விவரிக்கும் படமாக உருவாகிறது 'செயல்'. ரவி அப்புலு இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான வர் தான். விஜய் நடித்த 'ஷாஜகான்' படத்தை இயக்கியவர். "வட சென்னையில் தங்கச் சாலை சந்தையைத் தன்வசம் வைத்துக் கொண்டிருக்கும் ரவுடியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த நாயகன் எதிர்பாராத விதமாக அடித்து விடுகிறான். "எனவே, நாயகனை அதே சந்தையில் வைத்து பொதுமக்கள் பார்க்கும்படி அடிக்கவேண்டும். அப்போதுதான் மீண்டும் தனது கை ஓங்கும் என்று ரவுடி நினைக்கிறான். "இப்படியொரு பரபரப்பான சூழ லில் நாயகனை அந்த ரவுடியால் அடிக்க முடிந்ததா அல்லது ரவுடியை மீண்டும் நாயகன் அடித்தானா? அந்தச் சந்தை யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச் சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறோம்," என்கிறார் ரவி அப்புலு.
'செயல்' படத்தில் ராஜன் தேஜேஸ்வர், தருஷி

