'சென்னை பக்கத்துல' என்ற தலைப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. உண்மைக் கதையை மையமாக வைத்து வேலன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் எஸ்.சீனு நாயகனாகவும் கமலி நாயகியாகவும் அறிமுகமாகி றார்கள். இவர்களுடன் மாணிக்க விநாயகம், அஞ்சலி தேவி, ஓ.ஏ.கே. சுந்தர், வின்சென்ட்ராஜ், வாசு விக்ரம் உள்பட பலர் நடிக்கின்றனர். கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். உண்மையான காதல் என்றால் என்ன? என்பதை படத்தில் விவரித்துள்ளனர். மேலும் விவசா யத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல காரியத்தையும் இப்படத்தின் வழி செய்திருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர். "இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உரு வாகும் ஒரு காதல் கதை. இன்று சமூக வலைத்தளங்களில் காதல் மிகவும் கேவலப்படுத்தப்படுகிறது
'சென்னை பக்கத்துல' படத்தின் ஒரு காட்சியில் சீனு, கமலி. விநியோகிப்பாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள 'மதுர வீரன்' விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கும் படம் 'மதுர வீரன்'. மீனாட்சி எனும் புது முகம் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான கதையை இயக்குநர் முத்தையா காட்சி

