மத்திய அரசின் விருது தமிழகத்தையும் தமிழ் மக்களையும் கௌரவப்படுத்தியுள்ளது என்று கூறி உள்ளார் பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானி இளையராஜா. இந்திப் பாடல்களை நோக்கிச் சென்ற தமிழர்களைத் தன் இசையால் மீட்டெடுத்தவர் இளையராஜா என் றால் அது மிகையல்ல. கடந்த 1943 ஜூன் 2ல் தேனி மாவட்டத்தின் பண்ணைப்புரத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் ராசய்யா. 'அன்னக்கிளி' என்ற திரைப்படத்தில் 1976ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமா னார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன் னடம், இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
'தமிழக மக்களுக்கு கிடைத்த கௌரவம்'
1 mins read
-

