நேப்பாளம்: கர்நாடகாவில் கடந்த ஒருவார காலமாக சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேப்பாளத்திற்குச் சென்றார். அங்கு நேப்பாளத்தின் ஜானக்பூர், உ.பி.யின் அயோத்திக்கு இடையிலான பேருந்து சேவையைப் நேப்பாளப் பிரதமர் ஷர்மா ஒலியுடன் இணைந்து மோடி துவக்கி வைத்தார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், இருநாடுகளுக்கு இடையிலான பேருந்து சேவை யைத் துவக்கி வைப்பதில் நிறைவாக உள்ளது. இதன்மூலம் இருநாட்டு மக்களுக்கு இடை யிலான உறவு மேம்படும் என்றார்.
இந்தியா-நேப்பாளம் இடையே பேருந்து சேவை
1 mins read

