'திமிரு' படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பிறகு அவர் விஷாலின் அண்ணனை மணந்து அவருக்கு அண்ணியாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு படங் களில் நடிக்காமல் ஒதுங்கி யிருந்தார் ஸ்ரேயா ரெட்டி. தற்பொழுது 'அண்டாவ காணோம்' படத்தின் கதையைக் கேட்டதும் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தைத் தயாரித்துள்ள ஜே. சதீஷ் குமார் கூறியபோது, "அண்டாவ காணோம்' நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத் தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய நகைச் சுவை படமாக இருக்கும்.
ஸ்ரேயா ரெட்டி மறு பிரவேசம்
1 mins read
-

