ஒருவழியாக திருமணத் துக்கு சம்மதித்துள்ளாராம் அனுஷ்கா. அவரது குடும்பத்தார் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டதாகக் கேள்வி. இந்நிலையில், அடுத்து நடிக்கும் படங்களில் கதாநாயகனுடன் நெருக்கமான காட்சிகளோ, கவர்ச்சி காட்சிகளோ இல்லாத மாதிரி பார்த்துக் கொள்கிறாராம். திருமணமாகும் சமயத்தில் அத்தகைய காட்சிகளில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லையாம். எனவே இயக்குநர் தன்னிடம் கதை சொல்ல தொடங்கும் போதே இந்த நிபந்தனையை சொல்லிவிடுகிறார் அனுஷ்கா. நடிகை சமந்தா திருமணத்துக்கு பின் முத்தக் காட்சிகளில் நடித்தது சர்ச்சையை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்காவின் புதிய நிபந்தனை
1 mins read
-

