'கடுகு' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுக மானவர் சுபிக்ஷா. அதன்பிறகு 'கடுகு சுபிக்ஷா' என்றே கோடம் பாக்கத்தில் இவரைக் குறிப்பிடு கிறார்கள். ரசிகர்களும் திரை உலகத்தி னரும் தம்மை அவ்வாறு அழைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுபவர், மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கும் என கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில் லையாம்.
'கோலிசோடா-2' படத்தில் பரத் சீனிக்கு ஜோடியாக நடித்துள்ளார் சுபிக்ஷா. 'மீண்டும் உங்கள் படத்தில் நடிக்க வேண்டும்' என்று விஜய் மில்டனிடம் ஒருமுறை சாதா ரணமாகச் சொன்னாராம். அவரோ அதை மறக்காமல் தனது அடுத்த படத்திலும் சுபிக்ஷாவை நடிக்க வைத்துள்ளார். "'கடுகு' படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும் எனக்குப் புகழைப் பெற்றுக்கொடுத்தது. மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு உடனடியாக என் வீட்டுக் கதவைத் தட்டும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. "இப்படத்தில் என் கதாபத்திரத் தின் பெயர் இன்பவல்லி. பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலி யான கதாபாத்திரம்.

