அறிமுக இயக்குநர் கிராந்தி பிரசாத் கைவண்ணத்தில் உருவாகி வருகிறது 'சந்தோஷத்தில் கலவரம்'. நிரந்த், ருத்ரா, ஆர்யன், ரவி மரியா, ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படம் முழுவதும் திகில் காட்சிகள் நிறைந்திருக்குமாம். ஹாலிவுட்டைச் சேர்ந்த பௌலியஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வனப்பகுதியில் முக்கிய காட்சிகளை அற்புதமாகப் படமாக்கி உள்ளாராம். அன்பு, காதல், நட்பு, நகைச்சுவை, மோதல் என அனைத்தும் அம்சங்களும் நிறைந்த படமாக இது உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.
'சந்தோஷத்தில் கலவரம்'
1 mins read
-

