மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது 'மரகதக்காடு'. வனங்களின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கும் இப்படத்தில் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இதைத் தவிர, காடும் அருவியும் முக்கிய பாத்திரங்களாகப் படம் முழுவதும் இடம்பெற்றுள்ளன. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா, "கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. சில காலம் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்து விடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது," என்றார்.
காடுகள் குறித்து பேசும் 'மரகதக்காடு'
1 mins read
-

