'மிக மிக அவசரம்' என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறியுள்ளார் சுரேஷ் காமாட்சி. இவர் 'அமைதிப்படை 2', 'கங்காரு' படங்களைத் தயாரித்தவர். இந்தப் படத்தில் பெண் காவலர்கள் சந்திக்கும் பல பிரச்சினை களைக் கருவாகக்கொண்டு படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா கதாநாயகியாக நடிக்க, ஈ.ராமதாஸ், முத்துராமன், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் நடித்துள்ளனர். இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் படம் காவல் துறையினருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியிலும் ஓடிக்கொண்டு இருந்தது. அதைத் தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து இருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.
காவலர் தினத்தில் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அதுபற்றி அவர் கூறுகையில், "இது ஏதோ பெண் காவல் துறையினர் மட்டுமே சந்திக்கும் பிரச்சி னைகளைச் சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்துத் துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைச் சொல்லும் கதைதான். அந்த வகையில் இந்தப் படத்தின் கதைக்களமாக காவல்துறையைப் பின்னணி யில் வைத்துள்ளோம்.
மிக மிக அவசரம்' படத்தைப் பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்.