நான்கு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் சேரன் தற்பொழுது 'திருமணம்' என்கிற படத்தை இயக்குகிறார். தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க, கேரளாவைச் சேர்ந்த கவிதா சுரேஷ் நாயகியாகி உள்ளார். இவர் இயக்குநர் சேரனின் அலுவலகம் உள்ள அடுக்குமாடியில் குடியிருக்கும் நடன இயக்குநர் ஒருவரைப் பார்க்க வந்தவர் தவறுதலாக சேரன் வீட்டுக் கதவைத் தட்டப்போக, கதவை திறந்த அந்தச் சில கணங்களில் கவிதாவைப் பார்த்ததுமே அவர்தான் கதாநாயகி எனத் தீர்மானித்து விட்டாராம் சேரன்.
அதிர்ஷ்ட கதவைத் தட்டிய சேரனின் நாயகி
1 mins read
-

