அடங்க மறுக்கும் நாயகி

பாலிவுட், தெலுங்கு திரைகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ரா‌ஷி கண்ணா. 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் அடுத்தடுத்து மூன்று படங்களைத் தன் கைவசம் வைத்துள்ளார். ரா‌ஷி கண்ணாவின் முதல் படமான 'மெட்ராஸ் கபே' அவருக்கு விமர்சன ரீதியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ரா‌ஷி கண்ணாவின் முதல் மலையாளத் திரைப்படம் 'வில்லன்'. 'மெட்ராஸ் கபே' படத்திற்குப் பின் இவருக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் அதிகம் வந்தன. இவர் தற்பொழுது தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்திருக்கும் 'அடங்க மறு' படம் டிசம்பர் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறி இருப்பதாகக் கூறு கிறார். "உண்மையில் 'அடங்கமறு' படத்தில் என் கதாபாத்திரம் சும்மா வந்து செல்வதுபோல இல்லாமல் படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முழுமையான, வலுவான கதாபாத் திரமாக இருக்கும். "என்னுடைய முழுத் திறமை களையும் வெளிப்படுத்த உதவிய இந்தப் படம் எனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவமாக அமைந்தது," என்கிறார் ரா‌ஷி கண்ணா. 'அடங்கமறு' படம் இவருக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!