பாலிவுட், தெலுங்கு திரைகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷி கண்ணா. 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் அடுத்தடுத்து மூன்று படங்களைத் தன் கைவசம் வைத்துள்ளார். ராஷி கண்ணாவின் முதல் படமான 'மெட்ராஸ் கபே' அவருக்கு விமர்சன ரீதியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ராஷி கண்ணாவின் முதல் மலையாளத் திரைப்படம் 'வில்லன்'. 'மெட்ராஸ் கபே' படத்திற்குப் பின் இவருக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் அதிகம் வந்தன. இவர் தற்பொழுது தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்திருக்கும் 'அடங்க மறு' படம் டிசம்பர் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறி இருப்பதாகக் கூறு கிறார். "உண்மையில் 'அடங்கமறு' படத்தில் என் கதாபாத்திரம் சும்மா வந்து செல்வதுபோல இல்லாமல் படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முழுமையான, வலுவான கதாபாத் திரமாக இருக்கும். "என்னுடைய முழுத் திறமை களையும் வெளிப்படுத்த உதவிய இந்தப் படம் எனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவமாக அமைந்தது," என்கிறார் ராஷி கண்ணா. 'அடங்கமறு' படம் இவருக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.