இந்தி திரையுலக இயக்குநரான ரோகித் மிட்டலை கைபிடித்துள்ளார் நடிகை சுவேதா பாசு. 'ரா ரா', 'ஒரு முத்தம் ஒரு யுத்தம்', 'மை', 'சந்தமாமா' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுவேதா பாசு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். இடையில் திரை வாய்ப்புகள் குறைந்திருந்த நேரத்தில், பாலி யல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர், சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார். தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்த நிலையில், மீண்டும் திரை வாய்ப்புகள் தேடி வந்தன. இந்நிலையில் இவருக்கும் ரோகித் மிட்டலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, அண்மையில் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இருவரது திருமணம் புனே நகரில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் இருவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்தி இயக்குநர் ரோகித் மிட்டலை கரம்பிடித்த சுவேதா பாசு
17 Dec 2018 09:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Dec 2018 07:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!