சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கனா' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது இப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜை வெகுவாகப் பாராட்டினார் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னுடைய தந்தை இப்போது இருந்தால் நடிகர் சத்யராஜ் போன்றுதான் இருப்பார் என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார் அவர். "என் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துதான் சத்யராஜ் சாரைப் பார்க்கிறேன். அவர் அந்தளவுக்கு பாசமாகப் பழகுவார். இந்தப் படத்துக்காக நான் கடுமையாக உழைத்திருப்பதாகப் பலரும் பாராட்டு கின்றனர். ஆனால் கடுமையாக உழைக்கவேண்டும் என்ற ஆசை மட்டும்தான் எனக்கு இருந்தது.
"ஆனால் இயக்குநர் அருண்ராஜாவும் இப்படக் குழுவினரும்தான் அந்த ஆசையை நிஜமாக்கினர். என்னைப் பலவிதமாக உத்வேகப்படுத்தி உழைக்க வைத்த அவர்களுக்கு நன்றி," என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தொகுப்பின்போதே கதையும் காட்சி அமைப் பும் மிக நன்றாக இருப்பதாக படத் தொகுப்பாளர் ரூபன் பாராட்டினாராம். அதைக் குறிப்பிட்ட ஐஸ் வர்யா, அந்தப் பாராட்டு கிடைத்த அதே நொடியிலேயே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டதாகத் தெரி வித்தார். இதையடுத்துப் பேசிய நடிகர் சத்யராஜ் சினிமா குறித்து நன்கு அறிந்துள்ள படைப்பாளிகள் வெற்றி பெறுவது சினிமாவிற்கு நல்லது என்றார்.