தீபிகா படுகோன்: முத்தக் காட்சியில் நடிப்பேன்

திருமணமாகிவிட்டதால் முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா என்று தீபிகாவிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாலிவுட்டின் கனவுக் கன்னிகளான தீபிகா படுகோனும் பிரியங்கா சோப்ராவும் திருமணம் செய்துகொண்டதால் பாலிவுட் திரையே தற்பொழுது சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. நடிகை தீபிகா படுகோனும் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ரன்வீர் சிங் தனது 'சிம்பா' பட விளம்பர நிகழ்ச்சிகளில் மும்முரமாக இருக்கிறார். தீபிகா புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள் ளார்.

அண்மையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவிற்கு ரன்வீரும் தீபிகாவும் ஜோடியாகச் சென்றார்கள். அப்போது தீபிகாவிடம் திருமணத்திற்குப் பிறகு படங் களில் முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு தீபிகா "ரன்வீர் சிங் படுகோன் அதற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்," என்று தெரிவித்துள்ளார். அவரின் பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் திருமணத்திற்குப் பிறகு கணவரின் பெயரை மனைவியின் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆனால் தீபிகாவோ அதற்கு எதிர்மறையாக ரன்வீர் சிங் படுகோன் என்று கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!