திருமணமாகிவிட்டதால் முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா என்று தீபிகாவிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாலிவுட்டின் கனவுக் கன்னிகளான தீபிகா படுகோனும் பிரியங்கா சோப்ராவும் திருமணம் செய்துகொண்டதால் பாலிவுட் திரையே தற்பொழுது சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. நடிகை தீபிகா படுகோனும் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ரன்வீர் சிங் தனது 'சிம்பா' பட விளம்பர நிகழ்ச்சிகளில் மும்முரமாக இருக்கிறார். தீபிகா புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள் ளார்.
அண்மையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவிற்கு ரன்வீரும் தீபிகாவும் ஜோடியாகச் சென்றார்கள். அப்போது தீபிகாவிடம் திருமணத்திற்குப் பிறகு படங் களில் முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு தீபிகா "ரன்வீர் சிங் படுகோன் அதற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்," என்று தெரிவித்துள்ளார். அவரின் பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் திருமணத்திற்குப் பிறகு கணவரின் பெயரை மனைவியின் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆனால் தீபிகாவோ அதற்கு எதிர்மறையாக ரன்வீர் சிங் படுகோன் என்று கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து இருக்கிறது.