தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தனக்கு மும்பை விமான நிலையத்தில் நடந்த கொடுமைகளைப் பற்றி தற்போது கோபமாக வெளியிட்டிருக்கிறார். அதில், "ஒருநாள் காலையில் மும்பை விமான நிலையத்திற்குச் சென்றேன். அங்கே சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் வரிசைக்குச் சென்றதும் அங்கிருக்கும் பெண் என்னை தேவையில்லாமல் அலைக்கழித்தார். 75 நிமிடங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்குச் சென்றிருந்தபோதும் எனக்குத் தேவையில்லாமல் சங்கடங்களைக் கொடுத்தனர். அதைக் கடந்து விமானத்துக்குச் செல்லலாம் என்றால் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே விமானத்துக்குச் செல்லவேண்டிய நுழைவு வாயிலை மூடி இருந்தனர். டிக்கெட் வாங்கிய இடத்திலிருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்து செல்லவேண்டிய தூரத்தில் இருந்தது. இப்படி ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்த நான், அதை விமான நிறுவன நிர்வாகத்துக்குத் தகவலாக கொண்டு சென்றேன்.
உடனே என்னைத் தொடர்புகொண்டு, என்னிடம் தனியாகப் பேச அழைத்தனர். அவர்களோடு எனக்குச் சமாதானம் பேச விருப்பம் இல்லை. அதனால் நான் நேரம் ஒதுக்கவில்லை. நான் நிறைய விமான நிலையங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இதுபோல் நான் கஷ்டப்பட்டது இல்லை," என்று வருத் தத்துடன் கூறினார் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் அடுத்து தமிழில் 'பாரீஸ் பாரீஸ்' படம் வெளியாக இருக்கிறது.

