தொல்லையில் இருந்து விடுபட்ட அனுபமா பரமேஸ்வரன்

கடந்த பல நாட்களாக ரசிகர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களின் அன்புத் தொல்லையை எதிர் கொண்டதாகவும், தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டதாகவும் சொல்கிறார் இளம் நாயகி அனுபமா பரமேஸ்வரன். இவர் 'கொடி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். தமிழில் அதிக வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கவர்ச்சிக்கும் இவருக்கும் அறவே ஒத்துவராது. இதன் காரணமாகவே இவரைத் தேடி அதிக வாய்ப்புகள் வருவதில்லை. இதனால் ரசிகர்களிடம் வர வேற்பு கிடைத்தாலும் முன்னணி இயக்குநர்கள் அனுபமாவைக் கண்டுகொள்வதில்லை.

அனைவரிடமும் சகஜமாகப் பேசி பழகுபவர் என்பதால் அனுபமாவின் கைபேசி எண்கள் பலருக்கும் தெரிந்திருந்தது. இதனால் ஏராளமான ரசிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இவரைத் தினமும் தொடர்புகொண்டதோடு ஏகப்பட்ட செய்திகளையும் அனுப்பியுள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்தாராம். எனினும் யாரையும் கடிந்துகொள்ள முடியாது என்பதால் வேறு வழியின்றி தனது கைபேசி எண்ணையே மாற்றிவிட்டார். அதன்பிறகுதான் நிம்மதியாக உணர்கிறாராம். தற்போது அன்புத்தொல்லை தரும் அழைப்புகள் அறவே வருவதில்லை என்று உற்சாகத்துடன் சொல்கிறார் அனுபமா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!