'என்ஜிகே' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவில் பணிபுரிந்த அனை வருக்குமே தங்கக் காசு பரிசளித் துள்ளார் சூர்யா. இந்நிலையில் படத்தின் இயக்குநர் செல்வராகவன் திரைக்கு முன்னும் திரைக்குப் பின்னும் தம்மை புதிய உயரத்துக்கு நகர்த்தி இருப்பதாகவும் அதற்கு நன்றி என்றும் குறிப்பிட் டுள்ளார் சூர்யா. இதேபோல் சூர்யாவுடனான பயணம் சிறப்பாக இருந்தது என செல்வராகவனும் குறிப்பிட்டுள்ளார். "சூர்யாவின் திறமை, ஈடுபாட்டைக் கண்டு வியந்தேன். 'என்ஜிகே' படக் குழு அவருக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளது," என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
தங்கக் காசு பரிசளித்து அசத்திய சூர்யா
1 mins read
-

