சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவாத் தான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி முதல் தேதி வெளியாக உள்ளது. இதில் கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுமன், ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோரும் உள்ளனர். தெலுங்கில் வெற்றிபெற்ற 'அத்த ரின்டிக்கி தாரேதி' படத்தின் மறுபதிப்பு இது. லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி இசை யமைத்துள்ளார். இப்படத்தை பொங்கல் பண்டிகை யையொட்டி வெளியிடவேண்டும் என்பது சிம்புவின் விருப்பமாம். தயாரிப்பு தரப்பும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது.
ஆனால் எதிர்பாராத திருப்பமாக 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய இரு படங்களும் பொங்கலுக்கு வெளி யானதால் சிம்பு படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. போது மான திரையரங்குகள் கிடைக்காததே இதற்குக் காரணம். இதனால் சிம்பு வின் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து 'வந்தா ராஜாவாத் தான் வருவேன்' படத்தின் வெளி யீட்டுத் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று ஏக்கத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் வெளி யீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தனது திரைப்பய ணத்தில் மீண்டும் வெற்றிக் கணக்கை தொடங்கி வைக்கும் என நம்புகிறாராம் சிம்பு. அதற்கேற்ப சுந்தர். சி. உடனான இவரது கூட்டணியில் தரமான படம் உருவாகி உள்ளதாக கோடம்பாக்க விவரப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகை போட்டியில் இருந்து சிம்பு விலகியது நல்லதுதான் என்பதும் இவர்களது கருத்தாக உள்ளது.