'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வெற்றியடைய வாழ்த்து கூறி நடுக்கடலில் சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் பதாகை வைத் துள்ளதுடன், அதற்கு பாலாபிஷேகமும் செய்துள்ளனர். நடிகர் சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு, "நான் இரு காணொளிகளை வெளியிட்டிருந் தேன். அதில் ரசிகர்களிடம் பால் திருமுழுக்கு செய்யுங்கள் என்றுதான் சொன்னேன். என் கட்அவுட்டுக்கு ஊற்றுங்கள் எனக் கூறவில்லை. இப்போதும் சொல்கிறேன் பாலை வீணாக்காமல் தேவைப்படும் ஏழை மக்களுக்கு வழங்குங்கள். என் காணொளி பேச்சில் தவறிருந்தால் மன்னியுங்கள்," என்றார். முன்னதாக சிம்பு தன் ரசிகர்களிடம், "பால் திருமுழுக்கு செய்வது, கட் அவுட் வைப்பதற்குப் பதில் தாய்-தந்தையருக்குப் புதுத்துணி எடுத்துக் கொடுங்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்," என்று கூறி ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார்.
பின்னர் அதற்கு நேர்மாறாக "எனக்கு இருப்பது ஒன்றோ இரண்டோ ரசிகர்கள்தான். அவர்கள் பால் திருமுழுக்கு செய்தால் தவ றில்லை. இனி அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்," என்றார். இந்த இரண்டு காணொளிகளையும் ஒளி பரப்பிய தொலைக்காட்சிகள், சிம்பு மாற்றி மாற்றி இரு மாறுபட்ட கருத்துகளைப் பேசி வருவதாக விமர்சித்தன. இணையத்தில் சிம்புவை 'மீம்' பக்கங்கள் வழக்கம்போல கலாய்க்கத் தொடங்கின. இந்நிலையில் சிம்புவின் நண்பரான மகத், யுடியூப் பேட்டி ஒன்றில்"சிம்பு தெரிந்துதான் இந்த காணொளிகளை வெளியிட்டுள்ளார். "ஊடகங்கள் கெட்ட விஷயங்களை எவ்வளவு பெரிதுபடுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளவே அவர் இவ்வாறு செய்துள்ளார். "புகழ் பெறுவதற்காக சிம்பு இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஏற்கெனவே சினிமாவில் பல சாதனைகளைச் செய்துவிட்டார்," என்றார்.