நடிகை அஞ்சலியும் நானும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. உண்மையில் அஞ்சலி என் காதலி அல்ல; அவர் என்றென்றும் என் தோழியே. எங்களின் நட்பு எந்த ஒரு தொய்வும் இன்றி தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் ஜெய்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் ஜெய் கூறுகையில், "திருமணம் பற்றி நான் இன்னும் யோசிக்கவே இல்லை. என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். என் வீட்டில் எனது விருப்பமின்றி ஒருபோதும் எனக்கு மணப்பெண் தேடமாட்டார்கள்.
"நான் தற்போது 'பார்ட்டி', 'நீயா 2', 'மதுர ராஜா', 'கருப்பு நகரம்' ஆகிய படங்களில் நடித்துவருகிறேன்.
"நயன்தாரா, அஞ்சலி உள்ளிட்ட பல நாயகி களுடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். அவர்களுடன் நட்புடனே பழகுகிறேன்.
"தற்போதைக்கு நான் யாரையும் காதலிக்க வில்லை. நடிப்பில் கவனம் செலுத்துவதே என் முதல் வேலையாக உள்ளது. 'ராஜா ராணி' படத்தில் நயன்தாராவுடன் நடித்தேன். அவர் மிகவும் மென்மையானவர். அவருக்கு ரசிகர் கள் அதிகம். படப்பிடிப்பு நேரத்தில் நிறைய கூட்டம் வந்தாலும் எந்த ஒரு பதற்றமும் இன்றி மென்மையாக எல்லோரிடமும் பழகுவார். மலையாளத்தில் உருவாகும் 'மதுரராஜா' படத்தில் மம்முட்டி தம்பியாக நடிக்கிறேன். இப்படத்தில் சன்னி லியோனுடன் மீண்டும் நடனமாடியுள்ளேன்," என்கிறார் ஜெய்.
ஜெய்: அஞ்சலி காதலி அல்ல; தோழி
15 Feb 2019 10:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!