இஞ்சி இடுப்பழகியாக இருந்த ஷ்ருதிஹாசன் இப்போது உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார். சென்னை 'எஸ்ஆர்எம்' பல்கலைக்கழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் 'மிலான்' கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஷ்ருதிஹாசன் கலந்துகொள்வார். இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரைப் பார்த்த அவரின் ரசிகர்கள் 'அவரா இவர்?' என்று ஆச்சரியத்தில் மூழ்கினர். காரணம் எப்போதும் உடலைக் கச்சிதமாக வைத்திருக்கும் ஷ்ருதிஹாசன், உடல் எடைகூடி குண்டாக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடகியாகவும் கலக்கி வருகிறார். தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே
1 mins read
-

