திருமணத்துக்குப் பிறகும் சாயிஷா தொடர்ந்து திரைப்படங்க ளில் நடிப்பாரா எனும் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. தொடர்ந்து திரையுலகில் நீடிப் பது குறித்து முடிவெடுப்பதற்கான முழு உரிமையையும் இவருக்கு அளித்திருக்கிறாராம் கணவர் ஆர்யா. 'வனமகன்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வர் சாயிஷா. இவர் பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி. 'கடைக்குட்டி சிங்கம்', 'ஜூங்கா', 'கஜினிகாந்த்' என தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு ஆர்யாவுடன் காதல் மலர்ந்தது. இது குறித்து இவரது குடும்பத்தாருக்கு விவரம் தெரிய வந்ததும், சூட்டோடு சூடாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில் திருமணத் துக்குப் பிறகும் நடிக்கப் போவ தாக அறிவித்துள்ளார் சாயிஷா. "ஆர்யாவை கரம் பிடித்ததில் மகிழ்ச்சி. எங்களது ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள் ளது. தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு எடுக்க ஆர்யா எனக்கு முழு உரிமை கொடுத்துவிட்டார். எனவே தொடர்ந்து நடிப்பேன். "கதாநாயகர்களுக்கு முக் கியத்துவம் அளிக்கும் படம், தனி கதாநாயகி எனும் வித்தி யாசம் எல்லாம் பார்க்காமல் எப்போதும் போல் அனைத்துப் படங்களிலும் நடிப்பேன். சமந்தா, ஜோதிகா போன்றோரை இதில் முன்னுதாரணமாக கொண்டுள் ளேன்," என்கிறார் சாயிஷா. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. 'டெடி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கரடி கதா பாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சாயிஷாவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தகவல்.
தொடர்ந்து நடிக்கப்போகும் சாயிஷா
2 mins read
-

