கணவருக்காக மாறிய சமந்தா

கணவருக்காக மாறிய சமந்தா

1 mins read
43ae17fe-b600-457d-bd53-dc89f4369d24
-

நடிகை சமந்தாவின் செயல் களைக் கண்டு அவரது கணவர் நாக சைதன்யா கோபப்பட்டிருப் பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நட்சத்திர காதல் தம்பதி களான சமந்தாவும் நாக சைதன் யாவும் சந் தோஷமாக வாழ்க்கை பயணத்தில் பயணித்து வரு கின்றனர். ஆனாலும் இருவருக்கு இடையே ஒரு சில வித்தியாசம் உள்ளது. நடிகை சமந்தா சமூக ஊடகங் களில் அதிக ஈடுபாடு கொண் டவர். ஆனால் நாக சைதன்யா அப்படியில்லை. முக்கியமான நேரங்களில் மட்டுமே சமூக வலை தளங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். இதனால் சமந்தாவின் ஆர்வத்தை கண்டு சில சமயம் நாக சைதன்யா கோபப்பட்டுள் ளாராம். இது பற்றி பேசிய சமந்தா, "திரையில்தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள். நம் சொந்த வாழ்க்கையையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பார்க்க வெளியிட வேண்டுமா என்று நாக சைதன்யா கேட்கிறார். அதனால் அவர் என் அருகில் இருக்கும் போது இன்ஸ்டாகிராம், டுவிட் டர் எதையும் தொட மாட்டேன்," என்று கூறினார். சமூக ஊடகங்களில் தீவிரமாக உள்ள சமந்தா தற்போது கணவருக்காக தனது பழக்கத்தை மாற்றியிருக்கிறார்.