கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் தம்மை வெகுவாக ஈர்த்துள்ளதாகச் சொல்கிறார் நடிகை அமலாபால். அண்மைக் காலங்களில் அத்தகைய இடங்களை மிக நெருக்கத்தில் சென்று ரசிக்கத் தொடங்கி இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். "நம் மனதுக்குள் பல விஷயங்கள் குறித்து பல நூறு கேள்விகள் எழலாம். ஆனால், கேள்விகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவை அனைத்துக்குமான பதில் கடலிடம் உள்ளது. நம் கவலைகளை மறக்கடிக்கும் மாயாஜாலம், வித்தை கடற்பகுதிகளுக்கு உண்டு" என்று சொல்லும் அமலா தற்போது நீர்சறுக்கு விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார். சவால் நிறைந்த இந்த விளையாட்டு தனது உடல்வாகைப் பராமரிக்க கைகொடுப்பதுடன் உடல்நலத்தைப் பேணிக்காக்கவும் கைகொடுப்பதாகச் சொல்கிறார் அமலா.
'நீர் சறுக்கு' விளையாடும் அமலா
1 mins read
-

