எனக்கு வேண்டாதவர்கள் யாரோ திட்டமிட்டு என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இப் போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போகிற எண்ணமோ எப்போதுமே சினிமாவைவிட்டு ஒதுங்குகிற எண்ணமோ தனக்கில்லை என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி. என்னைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வதந்திகள் பரவுகின்றன. முன்பெல்லாம் இந்த வதந்திகளைப் படிக்கும்போது, "அடக்கடவுளே, நாம் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்கிறார்கள், விரும்பாதவர்களை எல்லாம் விரும்பியதாக நாளொரு கதையும் பொழுதொரு பேச்சுமாய் பொய் பொய்யாய் வதந்தியைப் பரப்புகிறார்களே என்று கோபத்தில் கொதித்துப் போவேன். ஆனால் இப்பொழுது அப்படியே அதற்கு நேர்மாறாக மாறிவிட்டேன். விதவிதமாய் ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்துவிட்டு சிரித்துக்கொள்கிறேன்," என்கிறார் அஞ்சலி.
'வதந்திகளைப் படித்து சிரித்துக்கொள்வேன்'
1 mins read
அஞ்சலி. -

