மீண்டும் களமிறங்கிய நடிகை பார்வதி

மீண்டும் களமிறங்கிய நடிகை பார்வதி

1 mins read
bac4ff31-b457-46c4-ac4d-9ba7bae7e2b8
-

சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிடத் துவங்கியுள்ளார் பார்வதி. இனி சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம். இந்தியத் திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் 'மீ டூ' விவகாரம் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு கருத்துக்களை தைரியமாக தெரிவித்து வந்தார் 'பூ' பட நாயகி பார்வதி. அச்சமயம் நடிகர்கள் மம்முட்டி உள்ளிட்ட சில நடிகர்களை அவர் விமர்சித்தும் இருந்தார். இதனால் அந்நடிகர்களின் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சமூக வலைத்தளங்களில் பார்வதியை சகட்டுமேனிக்கு விமர்சித்தனர். அதனால் மனம் வெறுத்துப்போன பார்வதி, கடந்த நான்கு மாதங்களாக சமூக வலைத்தளப் பக்கமே தலைகாட்டவில்லை.