மீண்டும் இணைந்த நாயகன், நாயகி

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கதாநாயகனுடன் இணைந்து நடிக்கிறார் ஷோபனா. அந்தக் கதாநாயகன் மலையாள நடிகர் சுரேஷ் கோபி.
இருவரும் கடந்த 2005ஆம் அண்டு 'மகளுக்கு' என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் அனுப் சத்தியன் இயக்கும் படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் சுரேஷ் கோபி.
இது நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகிறதாம். சுரேஷ் கோபி ஜோடியாக ஷோபனா ஒப்பந்தமாகியுள்ள நிலையில் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
தற்போது சுரேஷ் கோபி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் அவர் தேர்தல் முடிந்தபிறகே படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து ஷோபனா, நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.
எப்போதாவது படங்களில் நடிக்கும் ஷோபனா, நாட்டிய நிகழ்ச்சிகளை மட்டும் தொடர்ந்து நடத்திய வண்ணம் உள்ளார். அதுவே ஆத்மதிருப்தி அளிப்பதாகவும் சொல்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!