நடிகை ராதிகா சரத்குமார் இலங்கை தாக்குதலில் இருந்து முடியிழையில் தப்பித்ததாகத் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ராதிகா, அங்கிருந்து வெளியேறிய சில நிமிடங்களில் தாக்குதல் நடந்ததாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து மிகவும் அதிர்ச்சி அடைவதாகவும் அந்தப் பதிவில் அவர் கூறினார்.
அண்மை விவரங்களின்படி, இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள மூன்று தேவாலயங்களிலும் மூன்று சொகுசு ஹோட்டல்களிலும் நிகழ்ந்த தாக்குதலில் குறைந்தது 207 பேர் மாண்டனர். மேலும் 450 பேர் காயமடைந்தனர்.