நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாகத் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஓர் ஆண்டுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று விக்னேஷ் சிவன் கேட்டபோது அதைத் தள்ளிப் போட்டார் நயன்தாரா. தொடர்ச்சியாக வரும் பட வாய்ப்புகளே அதற்குக் காரணம். காதல் ஜோடிகளாகவே தங்கள் உறவை 3 ஆண்டுகளாக இருவரும் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் தாயார் இவர்கள் திருமணத்தை விரைவில் நடத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறார். விக்னேஷ் சிவனின் தாயார் மற்றும் குடும்பத்தினரை நயன்தாரா அடிக்கடி சந்தித்து வந்தாலும் திருமணம் பற்றி மூச்சுவிட மறுக்கிறார். இந்த ஆண்டில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று எண்ணிய நிலையில் நயன்தாரா இன்னும் ஒன்றரை ஆண்டிற்கு மேலாக தனது கால்ஷீட்டை புதிய படங்களுக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார். இது விக்னேஷ் சிவனின் தாயாருக்கு வருத்தம் அளித்திருக் கிறதாம். காதல் ஜோடிகளாகவே காலத்தை கழிக்கலாம் என்று எண்ணிவரும் நிலையில் திருமணத்துக்கு அதிகரித்து வரும் நெருக்குதலால் நயன்தாரா மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
மன உளைச்சலில் நயன்தாரா
1 mins read
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா -

