எல்.கே. சுரேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ளது 'நீயா-2'. இதில் நாயகனாக நடித்திருப்பவர் ஜெய். கேத்தரின் தெரேசா, ராய் லட்சுமி, வரலட்சுமி என மூன்று நாயகிகள் உள்ளனர்.
படத்தில் கணினி தொழில்நுட் பத்தின் உதவியோடு ஒரு கரு நாகம் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளது.
பாம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே 40 நிமிடங்களுக்கு இடம்பெற்றுள்ளதாம்.
கணினி தொழில்நுட்ப வசதி யுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும் என்கிறார் இயக்குநர்.
இந்நிலையில் கருநாகத்தைத் தேர்வு செய்தது ஏன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"வித்தியாசமான கருநாகமாக இருக்க வேண்டும் என்று விரும் பினோம். இதற்காக பல இடங் களுக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினோம். இறுதி யாக பேங்காக் நகரில் உள்ள 'கோப்ரோ வில்லேஜ்' என்ற இடத்தில் வித்தியாசமான கரு நாகம் இருப்பதாகக் தகவல் கிடைத்தது.
"நேரில் சென்று பார்த்தபோது மிரண்டு போனோம். முதலில் நிஜப் பாம்பை வைத்துக் காட்சி களைப் படமாக்கவே முடிவு செய்திருந்தோம். ஆனால் அந்தப் பாம்புக்கு ஒவ்வொரு வாரமும் தோல் உரிவதும் வளர்வதுமாக இருக்கும் என்று பராமரிப்பாளர்கள் கூறியதால் எங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம்.
"பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'நீயா' படத்தில் நல்ல பாம்பு இடம்பெற்றிருக்கும். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அதை விட அதிக பயத்தை ஏற்படுத்தவே கருநாகத்தை முக்கியக் கதாபாத் திரமாக இடம்பெறச் செய்தோம்," என்கிறார் இயக்குநர் சுரேஷ்.