ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை மெரினா கடற்பகுதியில் நடைபெற்ற மாபெரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தை விவரிக்கும் வகையில் உருவாகி உள்ள 'மெரினா புரட்சி' படத்துக்கு தணிக்கைக் குழு சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து இப்படம் விரைவில் திரைகாணும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பட வெளியீட்டை தடுக்க சிலர் தீவிர மாக முனைந்ததாகவும், அதை மீறி படம் திரைகாண உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் படக்குழுவினர் குறிப்பிட்டனர்.