"எனக்குப் பிடித்ததை நான் அணிகிறேன். கவர்ச்சியாக அணி பவர்கள் எல்லாம் எல்லை மீறி நடந்துகொள்வார்கள் என்றோ, போர்த்தி மூடிக்கொள்ளும் வகை யில் ஆடை அணிபவர்கள் எல்லாம் ஒழுங்கு மீறாமல் இருப்பார்கள் என்றோ கூறிவிட முடியாது. நல்ல தும் கெட்டதும் அவரவர் மனதில் தான் உள்ளது," என்று தெரிவித் துள்ளார் மாளவிகா மோகனன்.
சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியாக வும் ஆபாசமாகவும் ஆடை அணிந்து புகைப்படங்களைப் பதி விடுவது தொடர்கதையாகி வரு கிறது. அப்படி பதிவேற்றம் செய்யப் படும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் விதவிதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
'பேட்ட' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்துள்ள 'மகரிஷி' படத் திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள கேயு மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன்.
நேற்று அவருடைய இன்ஸ்ட கிராம் பக்கத்தில் குட்டை காற் சட்டை அணிந்த நிலையில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். இத னால் சர்ச்சை எழுந்தது. பலரும் இப்படியெல்லாமா புகைப் படத்தைப் பதிவிடுவர் எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.