'ஜிப்ஸி' படத்துக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்ததாகச் சொல்கிறார் நடிகர் ஜீவா.
இந்தப் படத்தில் இயக்குநர் ராஜு முருகன் தனக்கு நல்ல தீனி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஜிப்ஸி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் பேசியபோது ஜீவா இவ்வாறு குறிப்பிட்டார்.
"எந்தவொரு நடிகருக்கும் சிறந்த நடிகர் என்று பெயர் கிடைத்தால் அதற்கு இயக்குநரின் எழுத்தும் இயக்கமுமே காரணம்.
"ராஜு முருகனின் எழுத்து மனித உணர்வுகளை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தும். இந்தப் படத்துக்காக அனைவருமே உண்மையாக உழைத்தனர்.
"இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. நான் வீட்டிலேயே ஜிப்ஸி போலத்தான் இருப்பேன்.
"'ஜிப்ஸி' போன்ற ஒரு படைப் பில் இணைய எனக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்," என்றார் ஜீவா.
இதையடுத்துப் பேசிய இயக்கு நர் கரு.பழனியப்பன், ராஜு முருகனால் அரசியல் பேசாமல் இருக்க முடியாது என்றார். எனவே ராஜு முருகன் விரைவில் எம்எல்ஏ ஆகி சட்டப்பேரவைக்குச் செல்ல வாழ்த்துவதாகவும் அவர் கூறி னார்.
"கவிஞர் யுகபரதி எப்படி ராஜு முருகனுக்கு நல்ல தம்பியாக இருக்கிறாரோ, அதே போல் எனக்கும், மேலும் பலருக்கும் நல்லதொரு இளைய சகோதரராக அவர் இருக்கிறார்.
"இந்தப் படத்தின் நாயகன் ஜீவா, இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்து கள். தயாரிப்பாளர் அம்பேத்குமார் திரைத்துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும். அவர் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்.
"எனக்குத் தெரிந்த ஒரு பைய னுக்கு மருத்துவ உதவி தேவைப் பட்டது. இதுகுறித்து அவரிடம் தயக்கத்துடன் உதவி கேட்டேன். அவரோ ஏதும் கேட்காமல் உடனடி யாக உதவி செய்தார். நான் மருத் துவமனைக்குச் செல்லும் முன்பே அவர் அங்கு காத்திருந்தார்.
"முதன்முறையாக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் இப்படிப்பட்ட உதவிகளால்தான் இன்னும் அதே பதவியில் நீடிக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டுடன் இருப்பாரோ அப்படித்தான் அவரது படங்களும் இருக்கும் என்பது உறுதி," என் றார் கரு. பழனியப்பன். ஜிப்ஸி விரைவில் திரைகாண உள்ளது.